சுவீடனில் நீச்சல் உடையில் கட்டிப்புரண்டு திருடனை பிடித்த பெண் போலீஸ்…!!

Read Time:2 Minute, 55 Second

201607311038187786_Bikini-clad-Swedish-policewoman-Mikaela-Kellner-arresting_SECVPFசுவீடன் தலைநகர் ஸ்டாக்கோலை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி மிகேலா கெல்னர். இவர் அங்குள்ள கடற்கரை பூங்காவில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான்.

அவன் போலீஸ் அதிகாரி மிகேலா கெல்னர் மற்றும் அவரது தோழிகளிடமும் பத்திரிகை வேண்டுமா என கேட்டார். அவர்கள் வேண்டாம் என தெரிவித்தனர். இருந்தும் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

அவனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மிகேலா கெல்னர் தோழிகளிடம் அவர்களது பொருட்களையும், உடமைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ளும் படி கூறினார். அதற்குள் அந்த நபர் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

உடனே சுதாரித்துக் கொண்ட கெல்னர் நீச்சல் உடையுடன் விரட்டிச் சென்று அந்த திருடனை மடக்கி கீழே தள்ளினார். இருந்தும் அவன் எழுந்து ஓட முயன்றான்.

இருந்தும் அவனை விடாமல் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். இறுதியில் அந்த திருடனை கைது செய்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தார். இதற்கிடையே இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

இதனால் சுவீடனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் மிகேலா கெல்னர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தனது 11 வருட பணியில் இது போன்று நிகழந்ததில்லை. நீச்சல் உடையில் திருடனை பிடித்தது புதிய அனுபவம். என்னுடன் மற்றொரு போலீஸ் பெண் அதிகாரியும் இருந்தார் என தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் ஆளில்லாத தீவில் நிலநடுக்கம்…!!
Next post நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…!!