அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமியை பட்டினி போட்டு அடித்து சித்ரவதை…!!

Read Time:2 Minute, 54 Second

201607310605016963_Indian-origin-minor-girl-beaten-starved-locked-up-for-2_SECVPFஅமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி, சீத்தல். இந்தப் பெண், தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகள் மாயாவை பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

ஒரு முறை அந்த சிறுமியை அவர் செருப்பு அணிந்த காலால் முகத்தில் எட்டி உதைத்து காயப்படுத்தி உள்ளார்.

இரண்டாவது முறை மரத்தடியால் கன்னத்தில் தாக்கி உள்ளார். அதில் அந்த சிறுமியின் இடது புற கன்னம் வீங்கியது. சிராய்ப்புக் காயமும் ஏற்பட்டது. உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லை, எடை குறைவாக உள்ளார் என கூறி இருக்கிறார்.

அடுத்த முறையோ சிறுமியை உடைந்து போன துடைப்பத்தின் உலோக கைப்பிடியால் சீத்தல் தாக்கி இருக்கிறார். இதில் சிறுமியின் இடது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.

இப்படி ஒன்றரை ஆண்டு காலமாக அந்த சிறுமியை சித்தி சீத்தல் சித்ரவதை செய்து, இப்போது சட்டத்தின்பிடியில் மாட்டிக்கொண்டார். அவர்மீது குயின்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான தண்டனையை குயின்ஸ் சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்தது. அவருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

அவரது கணவர் ராஜேஷ், இதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது தனியாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது…!!
Next post ஆந்திராவில் பாதிரியார் கடத்தி கழுத்து அறுத்து கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்..!!