3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த இளம்பெண்..!!
தமிழகம் – திருச்சி பாலக்கரை துரைச்சாமிபுரம் கிராமத்தில் 23 வயதுடைய பெண்ணொருவர் தன்னை வேலையில் இருந்து நீக்கிய உரிமையாளரை பழிவாங்குவதற்காக அவரின் 3 வயது ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண் பின்னர் காவற்துறையில் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த 2 வருடங்களாக அப்பெண் வேலைப்பார்த்து வந்த கடையில் உரிமையாளருக்கும் அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ன்னர் , பலமுறை கடைக்கு வந்து குறித்த பெண் தன்னை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சியதாக தெரிகிறது.
>எனினும் , அவர் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த அப்பெண் கடை உரிமையாளரின் 3 வயது மகனை இவ்வாறு கழுத்தை நெறித்து கொலை செய்ததாக காவற்துறையில் தெரிவித்துள்ளார்.
Average Rating