வாழைச்சேனையில் திருடர்கள் கைது…!!

Read Time:2 Minute, 19 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)வாழைச்சேனை பகுதியில் பெறுமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஹைராத் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருட்களை பத்தொன்பது வயது இளைஞன் வைத்துள்ளார் என்று அவரது குடும்ப உறவினர் ஒருவரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து,

குறித்த இடத்தை பரிசோதனை செய்த பொலிஸார் குறித்த இளைஞரையும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமதியான பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் கல்குடா, ஏறாவூர், கல்முனை போன்ற பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரிடம் இருந்து எல்.சீடி. தொலைக்காட்சி பெட்டி – 01, கிருமிநாசினி தெளிக்கும் கருவி – 01,

கணனி – 01, துவிச்சக்கரவண்டி – 01, நீர் இறைக்கும் இயந்திரம் – 02, இரும்பு வெட்டும் இயந்திரம் – 01, கையடக்க தொலைபேசி – 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,

இவர்களிடம் இன்னும் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு மற்றும் கழிவறை, குளியலறையில் வீசும் துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்..!!
Next post ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம்..!!