உத்தரப்பிரேதசத்தில் மைனர் பெண்ணை கடத்தி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்…!!
உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி 3 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், படுகாயம் அடைந்த அச்சிறுமியை ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது அச்சிறுமி அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவரது தந்தை போலீசில் அளித்த புகாரில், ஜூலை 28-ம் தேதி மாலை தனது மகள் சைப்சு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் போலீஸ் விசாரணைக்குப் பயந்து புகார் அளிக்காமல் இரவு வரை காத்திருந்து, தனது மகள் வராததால் தனது உறவினர்களுடன் தேட ஆரம்பித்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, அசோக், விம்லே மிஸ்ரா மற்றும் ரோஹித் ஆகிய 3 வாலிபர்கள் தன் மகளை பக்கத்து கிராமத்திற்கு வெளியே விட்டுச் சென்ற தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக கான்பூர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating