ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை…!!
நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளது.
2004.02.01ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதவான் தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா வென்ச்சர் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே குறித்த நபரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலைசெய்யப்பட்டவரின் மனைவி இன்று சாட்சியமளித்துள்ளார்.
இதில், பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி அறிராமர், பழனியாண்டி நீலமேகம், நீலமேகம் கமலநாதன், நீலமேகம் பாலசந்திரன், சுப்பிரமணியம், சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றச்சாட்டிற்காக இந்த 7 பேருக்கும் தலா 3,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, மூன்றாவது குற்றச்சாட்டிற்காக இவர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating