கைகலப்பில் முடிந்த காதல் விவகாரம்..!!
காதல் விவகாரமொன்று கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கம்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கம்பளை இல்லவதுரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை தெல்பிடிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பின் தொடர்வதனை அவதானித்த யுவதியின் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குறித்த இளைஞனை சரமாறியாக தாக்கியுள்ளார்.
இதன்போது அவ்விடத்தில் நின்ற நபரொருவர் சண்டையை நிறுத்துமாறு சமரசம் செய்ய முற்பட்டபோது, அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னியில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating