நேபாள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் ஹெலிகாப்டர்: 7 பேர் பலியானதாக தகவல்…!!

Read Time:1 Minute, 48 Second

201608081600187747_7-feared-killed-in-private-chopper-crash-in-Nepal_SECVPFநேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே, தாயும், குழந்தையும் கோர்க்காவில் இருந்து இன்று பிற்பகல் ஒரு தனியார் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் பதின் தண்டா காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு நேபாள ராணுவக் குழு மற்றும் பிற மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால், மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம மனிதர்கள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைக்கிடம்…!!
Next post தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு…!!