ஆடை இறக்குமதி நிலையத்திற்கு சீல் வைப்பு..!!
புறக்கோட்டையில் சட்டவிரோதமாக ஆடை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தக நிலையம் ஒன்று சுங்க அதிகாரிகளின் விசேட விசாரணைப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரின் விசேட அறிவுரைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள துணி வகைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் காட்டப்படாததால் இவற்றை மூடுமாறு நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு 4 வர்த்தக நிலையங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுங்க அதிகாரிகளின் விசாரணைக்கு அமைய குறித்த வர்த்தக நிலையங்களுக்கான வரிகளும் அரசாங்கத்துக்கு செலுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக வருடமொன்றுக்கு பல பில்லியன் ரூபாய்கள் வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating