இளைஞரை கடத்தி கப்பம் கேட்டவர்கள் மாட்டிக்கொண்டனர்…!!
கப்பம் பெறும் நோக்கில் இளைஞர் ஒருவரை கடத்திய 5 சந்தேகநபர்கள் தங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
85 இலட்சம் கப்பப்பணம் கேட்டு கடந்த 7ஆம் திகதி ஊருமஸ்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவன் கடத்தப்பட்டிருந்தான்.
பண்டாரகம பிரதேசத்தில் வைத்தே குறித்த இளைஞன் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய தங்கல்ல பிரதேசத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சந்தேகநபர்கள் எல்பிட்டிய , தங்கல்ல, மாத்தறை, அம்பலாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் இன்று தங்கல்ல நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating