குடிக்க பணம் தராத மனைவியை குத்திக் கொன்றவர் தலைமறைவு…!!
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜான்டு காலனியைச் சேர்ந்தவர் மஹாவீர். குடி பழக்கத்திற்கு அடிமையான மஹாவீர், தனது மனைவி சரோஜ் மற்றும் குழந்தைகளை தினமும் அடித்து, உதைத்து, துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மஹாவீர் மது வாங்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். சரோஜ் பணம் தர மறுத்ததால் மஹாவீர் அவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரோஜின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் மஹாவீரை தேடிவருகின்றனர்.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating