அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை…!!

Read Time:3 Minute, 0 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90தம்மை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆஜர்ப்படுத்துவதனால் தாம் மொழி ரீதியிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்,

தாம் மொழி ரீதியிலான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளமையினால், தம்மை வட மாகாணத்திலுள்ள ஏதாவதொரு நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதை போன்று தம்மையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சில தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதையும், அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து விரைவில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி சாதகமான பதிலொன்றை பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு ஏதேனும் இடைகால நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க தான் முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: பல்லக்கும் கால்நடையும்…!!
Next post கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து – சொத்துக்களுக்கு பாரிய சேதம்..!!