குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , குத்திக்கொலை செய்த மனைவி..!!
Read Time:1 Minute, 12 Second
குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , மனைவியொருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் சவுதியின், டாயெப்பில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள குறித்த பெண், தனது கணவன் தலையணையால் அழுத்தி தனது குழந்தையை கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வரை கத்தியால் குத்தியதாக 26 வயதான அத்தாய் தெரிவித்துள்ளார்.
கணவனின் வயது 38 எனவும் , பிள்ளை தொடர்ச்சியாக அழுதமையை அடுத்து அவரால் தூங்க முடியவில்லை எனவும் , இதனால் ஆத்திரமடைந்த அவர் ,தன்னுடன் வாக்குவாதம் செய்ததாகவும் அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே , அவர் பிள்ளையைக் கொல்ல முயன்றதாகவும் , இதனையடுத்து அவரை தடுக்க வேறு வழியின்றி கொல்ல நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating