யாழ் பல்கலை: மூடப்பட்ட விஞ்ஞான பீடம் திறப்பு..!!

Read Time:1 Minute, 58 Second

1107732565jaffna uniயாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் நிலை காரணமாக மூடப்பட்ட விஞ்ஞான பீடம், இன்று முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் உள்ளிட்ட ஏனைய பீடங்களில் கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருந்த போதும், கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் அண்மையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அத்துடன், இந்த மோதல் சம்பவம் குறித்து பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அந்த நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ மா அதிபர் சஞ்ஜீவ தர்மரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்தப் பிரச்சினை குறித்து இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , குத்திக்கொலை செய்த மனைவி..!!
Next post திருமணத்தில் தாலி நுழைந்த கதை தெரியுமா?.. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது..!!