புதையல் தோண்டிய 9 பேர் கைது..!!

Read Time:1 Minute, 26 Second

121084203Arrestஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – குடாகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 12.08.2016 அன்று அதிகாலை ஹட்டன் பொலிஸ் பிரிவினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் அவிசாவளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அதேவேளை வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை நேற்று (11) மாலை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பணியாளர்கள் இருவர் விளக்கமறியலில்..!!
Next post ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்..!!