தாய் தந்தை பாசம் கிடைக்காததால் மகள் எடுத்த அதிர்ச்சிகர முடிவு..!!
Read Time:1 Minute, 24 Second
பெற்றோருக்கு கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு வீட்டில் இருந்து தப்பியோடிய மாணவியை தேடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தந்தை மற்றும் தாயின் பாசம் தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறி குறித்த மாணவி அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு காணாமல் போயுள்ளவர் தங்கொட்டவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் அதே பிரதேசத்தை சேர்ந்த பாடசாலையில் கல்வி;கற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மகள் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன், இது தொடர்பாக தேடி பார்த்த போதே அந்த கடிதம் கிடைத்துள்ளதாக பெற்றோர், காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.தங்கொட்டுவ காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை;முன்னெடுத்துள்ளனர்.
Average Rating