பிரபல இயக்குனரின் ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு” : நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்..!!
சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா, பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்
தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ரா, 42. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்.
ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார். ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறிஉள்ளார்.
Average Rating