சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் தற்கொலை முயற்சி..!!

Read Time:2 Minute, 17 Second

201608131208323679_boy-attempt-suicide-in-Juvenile-School-tanjore_SECVPFநாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் கடந்த 11-ந் தேதி சீர்காழி கடை வீதியில் உள்ள ஒரு கடையில் 4 செல் போன்களை திருடி விட்டார். இதுதொடர்பாக மணிகண்டனை திருவெண்காடு போலீசார் கைது செய்து சீர்காழி மாஜிதிரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் படி நேற்று காலை மணிகண்டனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் வழக்கம் போல் சிறுவர்களை திறந்து விட்டு மாலையில் சிறைகளில் அடைக்கும் போது மணிகண்டனை காணவில்லை அதிர்ச்சியடைந்த காவலர்கள் தேடி பார்த்தபோது சிறுவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் உள்ள ஜன்னலில் மணிகண்டன் கயிற்றில் தூக்கில் தொங்கினார்.

உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் எதற்காக தூக்குப்போட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!
Next post காஷ்மீர்: மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட இருவர் பலி…!!