சீகிரியாவில் பண்டைய பராம்பரியங்கள் அழியும் அபாயம்…!!
இலங்கையின்’ பிரபல சுற்றுலா தளமாக சீகிரியா அமைந்துள்ளது.இங்கு உள்நாடு மற்றும் வெள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் அதிகளவு வருகின்றனர். சுற்றுலா பிரயாணிகளின் தவறான செயற்பாடுகள் காரணமாக சீகிரியாவின் பண்டைய பாரம்பரிய அம்சங்கள் சேதமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
மத்திய தரவுப்படி இந்த நாட்களில் சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு5 ஆயிரம் அளவில் உள்ளனர்.
எனினும்இதனை பார்வையிட வரும்சுற்றுலா பிரயாணிகளுக்கு பயணிக்க உரிய பாதை அமைக்கப்பட்டிருந்தும், பலர் பண்டைய கல் சுவர்களில் நடந்து சென்று உலக பாரம்பரியத்தை சேதப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு செல்ல வேண்டாம் என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.
சிலருக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் சுவர்கள், தாம் அமர்ந்திருக்கும் ஆசனமாக மாறிவுள்ளது.மத்திய கலாசார நிதியத்தின் சீகிரிய காரியாலயத்தில்350 பணியாளர்கள்சேவை புரிந்து வருகின்றனர்.எனினும் இவர்கள் எவரும் இதனை கவனிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம் ஆகும்.
Average Rating