கடத்தப்பட்ட முச்சக்கரவண்டி பள்ளத்தில்…!!
முச்சக்கரவண்டி கடத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லிந்துலை பிரதேசப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாங்கந்தை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதையோர குடியிருப்பின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக இன்று காலைமுதல் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உட்பட பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது அப்பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்ட நிலையில் தள்ளப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating