கூண்டுக்குள் நின்று காளையைச் சீண்டியவருக்கு நேர்ந்த கதி…!! வீடியோ
ஸ்பெயினில் இடம்பெறும் காளைகளை அடக்கும் போட்டியானது உலகளவில் பிரபல்யம் பெற்றதாகும். அங்கு உள்ள காளைகளிடம் மாட்டினால் அதோ கதிதான். அப்புறம் உயிருடன் மீள்வதென்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல.
இவ்வாறான காளை ஒன்றினைப் பயன்படுத்தி நடு வீதியில் சற்று வித்தியாசமான ஷோ ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது வீதியில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் மனிதர் ஒருவரை நிறுத்தி வெளியே காளை ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
கூண்டுக்குள் நின்ற மனிதர் அக் காளையை சீண்டிப் பார்த்த நேரம் சினம் கொண்ட காளை இரும்புக் கூண்டைத் தகர்த்து உள்ளே சென்று அந்த மனிதரை தாக்கியுள்ளது. கூண்டிலிருந்து இலகுவில் மீள முடியாது சிக்கித் தவித்த அவரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மற்றையவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating