அநுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்! சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானப்படை உறுப்பினர்கள் இருவரையே இவ்வாறு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி அநுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வான் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் நடாத்திய தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்திருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு சந்கேகநபர்களையும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating