கும்மிடிப்பூண்டி அருகே 2 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது..!!
கும்மிடிப்பூண்டி அருகே 2 மாத குழந்தையை கொன்ற தந்தையை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள அமிர்தமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அம்பிகாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஜோதிலட்சுமி என்ற பெயர் வைத்து இருந்தனர்.
3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் தாமோதரன் மனவருத்தத்தில் இருந்தார். குழந்தையை வேறு எங்கேனும் விட்டு விடலாம் என்று மனைவியிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த குழந்தை ஜோதிலட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாமோதரன் தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான தாமோதரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கவரப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த தாமோதரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating