ஹற்றனில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை…!!
ஹற்றன் செம்புவத்தை தோட்டத்தில் இன்று மதியம் 22 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த தோட்டத்தின் வசிக்கும் 22 வயதான சிவலிங்கம் சசிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் மரணம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இளைஞன் தனது வீட்டிலே தூக்கிட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating