நடத்துனர் மீது சரமாரித் தாக்குதல்…!!

Read Time:3 Minute, 47 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கொழும்பில் இருந்து மன்னாருக்கு பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனரான மதவாச்சியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மீது நேற்று(19) இரவு 8.30 மணியளவில் மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து நேற்று பகல் பயணிகளுடன் மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தது.

குறித்த பேருந்து மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நிறுத்த முற்பட்ட போது இளைஞர் குழு ஒன்று தடிகளுடன் பேருந்தை சூழ்ந்து பேருந்தின் நடத்துனரான மதவாச்சியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மீது சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பேருந்தின் சாரதியையும் தாக்க முற்பட்ட வேளையில் சாரதி உடனடியாக பேருந்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த பேருந்தின் சாரதியை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இன்று சனிக்கிழமை காலை தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.

மன்னார் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மது போதையில் பேருந்தில் பயணிகளுக்கு இடையூரை ஏற்படுத்தியதாகவும், அந்த இளைஞர்கள் மன்னாரில் உள்ள தனது சக நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததன் காரணமாக குறித்த இளைஞர் குழுவினர் வருகை தந்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது.

தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு, தலைமறைவாகியுள்ள பலர் மீதும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொர்க்கபுரியாக மாறும் இலங்கை! படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்…!!
Next post ஒருவருக்காக 15 மணிநேர தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம்…!!