கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவனை கொன்ற மனைவி…!!
ஹப்புதளை பகுதியில் கணவனை(28) கொலை செய்த குற்றத்திற்காக அவரது மனைவியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம் பெற்ற முறுகள் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கியே அவரது கணவனை கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் இடம் பெற்றதை அடுத்து குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating