இஸ்ரேலில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை பிரஜை…!!

Read Time:2 Minute, 39 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)இலங்கையில் இருந்து இஸ்ரேலிற்கு பணியாற்ற சென்ற நபர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் வீடு ஒன்றை சுத்தம் செய்வதற்காக சென்ற நிலையில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

சந்தேகநபர் சட்டவிரோதமான முறையிலேயே அங்கு பணியாற்றி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜெருசலத்தில் வாழ்ந்து வரும் உதிசா பிரியங்கார என்ற 46 வயதுடையவரே குறித்த நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கார குறித்த வீட்டில் 3 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் என்றும் சிறுமியின் தாய் உறங்கிய போதே சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த போது குறித்த பெண் அவனை தள்ளிவிட்டு, தனது தாயின் அறைக்கு சென்றுள்ளார்.

அந்த நிலையில் பிரியங்கார வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரியங்கார மீது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருவதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாத்திரிகள் சென்ற பஸ் விபத்தில் பெண் பலி பலர் படுகாயம்…!!
Next post காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது…!!