திரிகோணமலையில் மீண்டும் குண்டு வீச்சு
இலங்கையில் திரிகோண மலை மாவட்டத்தில் மாவிலாறு அணை பிரச்சினை தொடர்பாக ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட 450-க்கும் மேற்பபட்டவர்கள் பலியானார்கள். 152 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் மூதூர், அதைசுற்றி உள்ள பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் இருதரப்பினரும் தாக்குதலை நிறுத்திக்கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டது. முதூரில் இருந்து விடுதலைப் புலிகள் தங்கள் முகாம்களுக்கு திரும்பினார்கள்.
மூதூர் கிராமம் ஏற்கனவே சுனாமி தாக்குதலில் சின்னா பின்னாமாகி இருந்தது. இப்போது நடந்த தாக்குதலில் இது மேலும் சீரழிந்து காணப்படுகிறது. தாக்குதல் இப்போது ஓய்ந்தாலும் மீண்டும் தாக்குதல் ஏற்படும் என்று பொதுமக்கள் பயந்து கொண்டு வீடுகளுக்கு திரும்ப மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் திரிகோணமலை மாவட்டத்தில் இன்று ராணுவம் பீரங்கி தாக்குதலை நடத்தியது.