ரயிலில் மோதி நபர் உயிரிழப்பு ; சடலம் அடையாளம் காணப்படவில்லை..!!
மொரட்டுவை – மோதர பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு நபரெருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.
மருதானையிலிருந்து அலுத்கம சென்ற ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 60 இலிருந்து 70 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வெள்ளை மற்றும் நீல நிறத்திலான சாரம் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating