பொலிஸ் சட்டங்களை யாராலும் மீற முடியாது…!!
பொலிஸ் சட்ட திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ மீறவோ முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தொழிற்துறையை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் இதற்காகஅர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ஜகத். பீ.விஜேவீர, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating