போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி 7 பேருடன் விடுதியில் உல்லாசம்…!!

Read Time:3 Minute, 49 Second

1472033834-6128-300x192லண்டனில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா கைது செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு குற்றவாளியை தேடி அவர்கள் அங்கு சோதனை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது, அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் ஒரு பெண், ஏழு ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார், அந்த பெண்ணின் அடையாள அட்டையை சோதனை செய்தனர்.

அது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், அந்த பெண் கத்தார் நாட்டு இளவரசி ஷெய்கா சல்வா என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இதுபற்றி கத்தார் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

எப்படியோ இந்த செய்தி வெளியே பரவி லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த செய்தியை ஒளிபரப்பின. தங்கள் நாட்டு இளவரசி, 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த போது, போலீசாரிடம் பிடிபட்ட விவகார்ம கத்தார் நாட்டு மக்களையும், அரச குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

இங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய ரெய்டில் தான் இளவரசி சிக்கியுள்ளார்.

அவரது ஐடியை சரிபார்த்த போது அவர் கத்தார் இளவரசி என்பது தெரிய வந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசியிடம் விசாரித்த பிறகு இங்கிலாந்து போலீசார் அங்குள்ள கத்தார் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. ஷெய்கா சால்வா முன்னாள் பிரதமர் ஹமது பின் ஜச்சிம் பின் ஜபோர் அல் தானியின் மகள் ஆவார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரின் லீலை!!: வயக்கரா பாவித்துவிட்டு உறவுகொண்டதால் மரணமடைந்த கள்ளக்காதலன்..!!
Next post அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி காட்டிய மனிதாபிமானம் : தானும் அழுது ஏனையவர்களையும் கண்ணீர் சிந்தவைத்தார் (காணொளி)