மகள்களை இருட்டறைக்குள் வைத்துப் பூட்டிய குடிகார தந்தை: 3 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்ட அவலம்…!!

Read Time:3 Minute, 4 Second

201608262016435989_deserted-by-father-2-girls-rescued-from-locked-room_SECVPFடெல்லி சமயபூர் பதலி ஏரியாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் பூட்டிய அறையை உடைத்து பார்த்ததில் எட்டு மற்றும் மூன்று வயதைச் சேர்ந்த இரண்டு பெண்குழந்தைகள் அந்த வீட்டில் இருந்தது கண்டறியப்பட்டது.

உடலில் புழுக்கள் தோன்றி மோசமான நிலையில் இருந்த இருவரையும் போலீசார் பாபா அம்பேத்கார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் குழந்தைகளின் தந்தை பிண்டி ஒரு முழுநேரக் குடிகாரர் என்பதும் குடியில் இரு குழந்தைகளையும் வீட்டில் வைத்துப் பூட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீசார் ‘‘மூன்று நாட்கள் வரை தண்ணீர், சாப்பாடு இல்லாமல் இரு குழந்தைகளும் இருட்டறைக்குள் தவித்துள்ளனர். வெளிச்சம் துளியும் இல்லாததால் இரண்டு குழந்தைகளின் உடல்களும் புழுக்கள் தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. தற்போது சிகிச்சையினால் இருவரின் உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

இரு குழந்தைகளையும் சந்தித்து பேசிய பின்னர் டெல்லி மகளிர் பெண்கள் ஆணைய அதிகாரி சுவாதி மலிவால் ‘‘இரண்டு குழந்தைகளையும் மகளிர் குழு பாதுகாக்கும்’’ என்று தெரிவித்தார்.

தப்பிசென்ற குழந்தைகளின் தந்தை பிண்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடிக்க தனிப்படைகளையும் அமைத்துள்ளனர்.

பெற்ற குழந்தைகளை தந்தையே இருட்டறையில் வைத்துப் பூட்டிய சம்பவம் புதுடெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் பெண் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் அகற்றம்…!!
Next post திருமணம் செய்து கொள்ளாமல் ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா…!!