யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள்: அமைக்கும் பணிகள் தீவிரம்…!!

Read Time:2 Minute, 27 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். நகரை அண்டியுள்ள வேம்படிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, சுன்னாகம் சந்தி, நெல்லியடிச் சந்தி ஆகிய ஆறு முக்கிய சந்திகளிலேயே இவ்வாறு வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.

திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி ஆகிய இரு சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளை பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய நான்கு சந்திகளிலும் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டின் முக்கிய சந்திகளான மேற்படி சந்திகளில் போக்குவரத்து நெரிசல் வழமையை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணிக்க தயாராக இருக்கிறேன்!! 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு…!!
Next post 5 ஆண்டுக்கு முன் அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது…!!