திருவனந்தபுரம் அருகே 9 வயது மகனை அடித்து உதைத்த தாய் கைது: கைக்குழந்தையுடன் ஜெயிலில் அடைப்பு..!!
திருவனந்தபுரத்தை அடுத்த அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி செலினா (வயது 30).
இவர்களுக்கு 9வயதில் ஒரு மகனும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுவன் வீட்டுக்கு வெளியே காயங்களுடன் அழுது கொண்டிருந்தான்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த சிறுவனை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிறுவன் பலமான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவனை யாரோ தாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுபற்றி குழந்தைகள் நல குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவன் தன்னை பெற்றோர் தாக்கியதாக கூறினான். தாயார் ஆயுதங்களால் அடித்து உதைத்ததாகவும் கூறி அழுதான்.
இதையடுத்து போலீசார் சிறுவனின் பெற்றோர் நசீர், செலினா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, சிறுவனின் தந்தை நசீர் கஞ்சா வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்றது தெரிய வந்தது.
எனவே போலீசார் சிறுவனின் தாயார் செலினாவை கைது செய்தனர். அவரது குழந்தைக்கு 3 மாதமே ஆவதால் அந்த குழந்தையும் தாயாருடன் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டது.
அங்கு விசாரணை நடத்திய பின்பு போலீசார் செலினாவையும், கைக்குழந்தையையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கஞ்சா வழக்கில் ஜெயிலில் இருக்கும் நசீரையும், மகனை தாக்கிய வழக்கில் கைது செய்து விசாரிக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating