பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 12 பேர் படுகாயம்…!!
கினிகத்தேனை – கடாவளை பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கினிக்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹற்றனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வேனும் கினிகத்தேனை கடாவளை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பபேருந்தில் பயணித்த 9 பேரும், வேனில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளார். பேருந்து முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating