அறிவியலின் அடுத்த கட்டம்! இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சி…!! வீடியோ
மருந்து கண்டுபிடிக்கபடாதா நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.அதாவது அந்த நோய்க்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்தபின் இறந்த உடலை மீண்டும் உயிர்பிக்க முடியுமா? என் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
மேற்கூறியது போல், எவ்வித சிகிச்சைகளும் அற்ற நோய்களுக்கு இலக்காகி மரணிப்பவர்களை உறையவைத்து மருத்துவ வளர்ச்சியின் பின், அந்நோய்க்கான தீர்வு கிடைக்கப்பெறும் போது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டால் மரணித்தவர்களை மீண்டும் உயிர்பிக்க முடியுமாம்.
இதற்கான சோதனைகளும் தற்போதுள்ள ஆராய்ச்சியாளர்களினால் அமெரிக்காவில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனை கிர்யொனிக்ஸ் (Cryonics) என்று அழைப்பர்.
மேலும் இறந்த மனிதர்களையும், மிருகங்களையும் கொண்டு இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் நிட்ரோஜன் (nitrogen) ன் உதவியுடன் -196 டிகிரியில் இவ்வாறு பதபடுத்துகின்றனர்.
இருந்தும் இதில் பலதரபட்ட முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு இச்செயற்பாட்டின் போது பிரணவ வாயு முற்றாக தடைபடுகின்றது. மேலும் உடலில் உள்ள எலும்புகள் முறிவுகளுக்கு உள்ளாகின்றன. இதற்கான தீர்வு தற்போது கிடைக்கபெறாவிட்டாலும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இன்று வரை 270க்கும் மேற்பட்ட இறந்த மனித உடல்களை இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating