பிரபாகரன் மற்றும் திருவள்ளுவரின் உருவம் பொறிக்கப்பட்ட தாலி – கனடாவில் நடந்த வினோத திருமணம்…!!
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோர் தங்களின் திருமணத்தினை ஒரு அடையாளத்துடன் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர்.
அதன்படி தமது தாலிக் காசில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் திருவள்ளுவரின் உருவத்தை பொறித்து தங்கத்தால் தாலி செய்து அந்த தாலியை மணமகள் மீராவின் கழுத்தில் மணமகன் கார்த்திக் கட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை தங்ககாசு ஒன்றிலும், மறுபக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலி உருவமம் இருந்துள்ளது. மற்றொரு காசில் திருவள்ளுவரின் உருவம் இருந்தது. நடுநாயகமாக தங்கத்தாலி இருக்க இருபுறமும் அந்த காசுகள் கோர்க்கப்பட்டுள்ளது.
பின்னர் மணமக்கள் இருவரும் பிரபாகரனின் சிலை முன்பாக நின்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்ட வினோத திருமணம் கனடாவில் நடந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating