கருவில் குழந்தை எப்படி வளர்கிறது உங்களுக்கு தெரியுமா? மிஸ்பண்ணிடாமா பாருங்க…!!

Read Time:8 Minute, 19 Second

baby_growth_043.w540கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின் மனதில் ஓர் ஆசை கட்டாயம் இருக்கும். அதில் குழந்தையின் வளர்ச்சி வாரா வாரம் எப்படி இருக்கும் என்பது தான்.

உண்மையிலேயே வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுக்கு கருப்பையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள். இங்கு எந்த வாரத்தில் குழந்தையின் எந்த உறுப்புக்கள் வளர்ச்சியடைந்திருக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வாரத்தில்…

கர்ப்பத்தின் எட்டாம் வாரத்தில் குழந்தையின் கண்கள் மற்றும் காதுகள் வளர ஆரம்பிக்கும். இந்த வாரத்தில் குழந்தை 2 செ.மீ நீளத்தில் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் முகமும் வளர ஆரம்பித்திருக்கும்.

12 ஆம் வாரத்தில்…

கர்ப்பத்தின் 12 ஆம் வாரத்தில் குழந்தை 5 செ.மீ நீளத்தில் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் உடல் முழுவதும் வளர்ந்து, அதில் அழகிய பிஞ்சு கைகள், கால்களும் வளர்ந்திருக்கும்.

20 ஆவது வாரத்தில்…

கர்ப்பத்தின் 20 ஆவது வாரத்தில் குழந்தை 18 செ.மீ நீளம் வளர்ந்து, வயிற்றிற்குள் அசைய ஆரம்பிக்கும். இக்காலத்தில் தான் குழந்தைக்கு புருவங்கள் தெரிய ஆரம்பிக்கும் மற்றும் விரல் நகங்களும் நன்கு வளர்ந்திருக்கும்.

24 ஆவது வாரத்தில்…

24 ஆவது வாரத்தில் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிப்பதோடு, பதிலளிக்கும் திறனும் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் முகம் மற்றும் உறுப்புக்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

27 ஆவது வாரத்தில்…

27 ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தையால் சுவாசிக்க முடியும்.

28 ஆவது வாரத்தில்…

28 ஆவது வாரத்திற்கு பின் குழந்தையினால் வாசனையை நுகர முடியும். அதாவது இக்காலத்தில் குழந்தையினால் உணவின் வாசனையை நுகர முடியும்.

32 ஆவது வாரத்தில்…

32 ஆவது வாரத்தில் குழந்தை கண்களைத் திறக்கும். மேலும் இக்காலத்தில் குழந்தையின் நிலை மாறி, குழந்தை தலைகீழாக இருக்கும். இந்த வாரத்தின் போது குழந்தை தீவிரமாக தன் கை மற்றும் கால்களால் உதைக்க ஆரம்பிக்கும். முக்கியமாக இக்காலத்தில் குழந்தை 44 முதல் 55 செ.மீ உயரத்தில் இருக்கக்கூடும்.

40 ஆவது வாரத்தில்…

40 ஆவது வாரத்தில், அதாவது 9 மாத காலத்தில் குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைந்திக்கும். இந்த மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு தயாராக இருக்கும். மேலும் இக்காலத்தில் குழந்தையின் எடை 2-3 கிலோ இருக்கும். சில குழந்தைகள் 5 கிலோ எடையுடன் கூட இருப்பார்கள்.

கருவறையில் இருக்கும் குழந்தையின் வியப்பூட்டும் செயல்பாடுகள்!…

உலகில் மிகவும் சிக்கலான இயக்கமுறை (Mechanism) என்று கருதப்படுவது பெண்ணின் கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சி தான். கருவும், விந்தும் இனைந்து உருவாகும் ஓர் சிசுவின் வளர்ச்சி இன்று வரை ஓர் பெரும் விந்தையாக தான் காணப்படுகிறது.

நூற்றாண்டு காலமாக பல ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக விந்தும், சிசுவும் உருவாக்கி வளமான, ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அதிசயமாக கருதப்படும் கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சின் போது, அந்த சிசுவின் சில செயல்பாடுகள் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது…..

ருசி அறிந்திக்கொள்ளும் திறன்

கருவறையில் இருக்கும் சிசு, தனது தாய் சாப்பிடுவதை ருசிக்கும் திறன் கொண்டிருக்குமாம்.

மன அழுத்தத்தை உணர்தல்

கருவில் வளரும் சிசுவினால், தனது தாயின் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உணர முடியுமாம். இது, சிசுவின் வளர்ச்சியை சற்று பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் நமது முன்னோர்கள் புள்ளத்தாச்சிய சந்தோசமா வெச்சுக்கணும் என்று கூறினார்கள் போல.

முக பாவனைகள்

36வது வாரத்தில் இருந்து கருவில் வளரும் சிசுவானது முக பாவனைகள் செய்ய ஆரம்பிக்கிறது, சிரிப்பது, மூக்கு, கண், புருவம் போன்றவற்றை சுருக்குவது போன்ற பாவனைகள் செய்ய ஆரம்பிக்கும்.

சிசு அழும்

பிரசவமாக இருக்கும் இறுதி மூன்று மாத காலத்தின் போது (6-9 மாதங்கள்) சிசு அழவும் செய்யுமாம். ஆனால், அது மிகவும் அமைதியான சப்தமாக இருக்கும். இதை அல்ட்ராசவுண்ட் ரெகார்ட் செய்து கண்டறிந்துள்ளனர்.

நினைவுக் கொள்ளும் திறன்

இறுதி மூன்று மாத காலத்தில், கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி இருப்பவர்கள் பேசுவதை நினைவில் கொள்ளும் ஆற்றல் சிசுவிற்கு உள்ளது.

நுரையீரல்

கருவில் இருக்கும் சிசுவின் உடலில் கடைசியாக வளரும் பாகம் நுரையீரல் தான்.

உணரும் திறன்

குழந்தை பிறக்கும் முன்னர் கருவில் இருக்கும் போதே, பார்க்கும், கேட்கும் மற்றும் உணரும் திறன் கொண்டிருக்கும்.

சிறுநீர் கழிக்கும்

கர்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலத்தின் போதே, சிசு கருப்பையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடுமாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹற்றனில் பனி மூட்டம்! வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!
Next post பான் கீ மூன் – விக்னேஸ்வரன் சந்திப்பு…!!