திடீரென பற்றி எரிந்த வாகனம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி…!!

Read Time:2 Minute, 16 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்ததால் சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு அத்தியாவசிய உணவுப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் கொள்கலனே மா மூடைகளை ஏற்றிச் சென்ற போது இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது.

திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு சென்ற போதே கந்தளாய், பொட்டகாடு, எரிக்கிளம் காட்டுப்பகுதியில் வைத்து கொள்கலன் பெட்டி வாய்க்காலுக்குள் தலை கீழாக குடைசாய்ந்ததோடு ,கொள்கலன் தீப்பற்றியது. உடனே அப்பிரதேச பொதுமக்கள் கந்தளாய் பொலிஸாருக்கும், பொலிஸ் அவசர பிரிவினருக்கும் தகவல் வழங்கியதுடன் தீப்பிடித்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இயந்திரக் கோளாறு வாகனம் காரணமாகவே இவ்வாறு தீப்பிடித்திருக்கலாம் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!
Next post குருணாகலில் கோர விபத்து! மூவர் பலி – ஏழு பேர் காயம்..!!