பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி…!!

Read Time:2 Minute, 48 Second

201609031001592878_Mystery-fever-kills-student-at-Ponneri_SECVPFபொன்னேரி சிறுவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது 2 வது மகள் ஹேமலதா (9).

இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹேமலதாவுக்கு திடீர் என மர்ம காய்ச்சல் வந்தது. அவளை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. அவளை சிகிச்சைகாக மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் காய்ச்சல் விட்டதும் வீடு திரும்பினார்.

நேற்று ஹேமலதா பள்ளிக்கு சென்றார். அப்போது அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. இதை பார்த்த ஆசிரியர் அவளை சிகிச்சைக்காக மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். காய்ச்சல் அதிக மானதால் மேல் சிகிச்சைக்காக ஹேமலதாவை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹேமலதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மர்மகாய்ச்சலுக்கு மாணவி ஹேமலதா இறந்ததை தொடர்ந்து நேற்று இரவு மீஞ்சூர் சுகாதாரத்துறை சார்பில் மக்களுக்கு நில வேம்பு கசாயம், மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஊரில் உள்ள குப்பைகள், கழிவு நீர்கள் உடனே அகற்றப்பட்டன. மேலும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: மில் தொழிலாளி கைது…!!
Next post ராமேசுவரம் அருகே சிறுமியை கற்பழித்து கொன்ற தந்தை கைது…!!