மாலைதீவு பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு பலி…!!
Read Time:1 Minute, 19 Second
மாலைதீவு பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி – மிலாகிரிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதானவர் என்றும் குறித்த பிரஜை ரயில் என்ஜினில் மோதுண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலில் தங்கியிருந்த குறித்த மாலைதீவு பிரஜை ஹோட்டலில் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating