வெளிநாடு செல்ல சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது…!!
வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுள் போலி பொலிஸ் அறிக்கை உள்ளிட்டவையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களை தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சந்தேகநபர்களுள் ஒருவர் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating