திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயரின் மனைவி தற்கொலை…!!
ஆந்திராவை சேர்ந்தவர் நாகார்ஜுனன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் வேளச்சேரி பத்மாவதி மெயின் ரோடு பகுதியில் வசித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஸ்ரீவாணி (21). இவர்களுக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் ஆனது.
நேற்று இரவு நாகார்ஜுனன் வேலைக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டுக்கு நாகார்ஜுனன் வந்த போது ஸ்ரீவாணி பிணமாக தூக்கில் தொங்கி இருந்தார்.
இதுகுறித்து வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஸ்ரீவாணி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவாணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள்.
ஸ்ரீவாணிக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating