கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படு கொலை…!!
மாவனல்லை மயூரபாத மைதானத்தில் வைத்து இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (0 9) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதான இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating