மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் விசாரணை…!!
மாத்தளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாவட்ட செயலக காரியாலயத்திற்கான காணியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் பொலிஸ் பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இது தொடர்பான ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஒப்படைத்ததன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் அந்த துப்பாக்கில் ஏதும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது உறுதியானால் அவை அழித்து விடப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாத்தளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாவட்ட செயலக காரியாலயத்திற்கான காணியில் மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது இந்த பழைய துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிகள் பல ஆண்டுகள் பழமையானது என்பதுடன், அவை துருப்பிடித்து இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating