இளைஞரை தாக்கிய அரசியல்வாதி கைது..!!
இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்பிலிப்பட்டிய பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரண்டு பேரை கொலன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் கொல்லன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, வான் ஒன்றில் வந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உட்பட சந்தேக நபர்கள் இளைஞனை தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தரப்பை சேர்ந்த ஒருவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞனால் தாக்கப்பட்ட நபர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
முன்னாள் பிரதேசசபை உறுப்பினரின் உறவினர் ஒருவர் தவணை முறையில் செலுத்தில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ததில் ஏற்பட்ட தகறாரே சம்பவத்திற்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating