புதிய விமானப்படை தளபதி நியமிப்பு..!!
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
எயார் வைஷ் மார்ஷலாக இருந்த அவர் எயார் மார்ஷல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் தளபதியாக பதவி வகிக்கும் ககன் புளத்சிங்களவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான கபில ஜயம்பதி 1982 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து கொண்டார்.
அன்று தொடக்கம் இலங்கை விமானப்படையில் பல்வேறு பதவிகளை கபில ஜயம்பதி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating