இந்த காய்கறிகளில் என்ன இருக்கிறது?

Read Time:4 Minute, 52 Second

vegetable_health_001ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அந்த பரிந்துரையின் பேரில் நாம் காய்கறிகளை எடுத்துக்கொண்டாலும், சில சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகிறோம்.

அவ்வாறு ஒதுக்கிவைக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மட்டுமல்ல நோய்களுக்கான மருத்துவ சக்தியும் அடங்கியுள்ளன.

கத்தரிக்காய்

பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. கத்தரிக்காயில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் உள்ளன.

மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அவரைக்காய்

அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார்சத்து உடலை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால் உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

வெண்டைக்காய்

குளிர்ச்சி தரும் வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு.

இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டை தணிக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது.
உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை உண்டாக்கும் என்பதில் கவனம் தேவை.

புடலங்காய்

நீர்ச்சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று. இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
உடல் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குண்டாகும்.
மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

கொத்தவரங்காய்

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது.

மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணின் சடலம் மீட்பு ; கொலையா? தற்கொலையா?
Next post சினம் கொண்டு கொத்தும் நாகம்: சிறிதும் பயமின்றி பாம்புடன் விளையாடும் சிறுமி…!! வீடியோ