தெலுங்கானாவில் அணையில் மூழ்கி 5 என்ஜினீயரிங் மாணவர்கள் உயிரிழப்பு…!!
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் இன்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். அணையில் இறங்கி நீந்திக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற மாணவி ஒருவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற மற்ற மாணவர்கள் அங்கு சென்றபோது அவர்களும் மூழ்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால், மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் மாணவிகள் ஆவர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரவ்யா என்ற மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெறுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating