கள்ளக்காதலி வேறொருவருடன் ஓடியதால் தொழிலாளி தற்கொலை..!!

Read Time:2 Minute, 13 Second

sucide-1ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சானிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாத்திரி (வயது 38), நெசவுத்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த திருமணமான ரூபா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ரூபாவை சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு அழைத்து வந்த வெங்கடாத்திரி, அவரை திருமணம் செய்யாமலேயே அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அத்துடன் வெங்கடாத்திரி தனது நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.2½ லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள், மதனப்பள்ளிக்கு வீடு தேடி வந்து கடனை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதற்கிடையே, கடன் பிரச்சினையால் சிக்கி தவித்த வெங்கடாத்திரியை கைவிட்டு விட்டு, கடந்த வாரம் ரூபா வேறொரு நபருடன் ஓடி விட்டதாக தெரிகிறது. கடன் தொல்லையாலும், கள்ளக்காதலி ரூபா வேறொரு நபருடன் ஓடி விட்டதாலும், மனமுடைந்த வெங்கடாத்திரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்பகுதியில் இருந்தவர்கள், இதுபற்றி மதனப்பள்ளி டவுன் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்..!!
Next post வாழைச்சேனையில் பிள்ளைகள் காணாமல் போனமையினால் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!! (வீடியோ)